8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

முழுமையான அணு ஆயுத ஒழிப்புக்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் கிடையாது: வட கொரியாவுக்கு அமெரிக்கா தகவல்  

வடகொரியா முழுமையாக அணு ஆயுத ஒழிப்பு செய்வதற்கு முன்னர் கொரிய போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது சாத்தியம் கிடையாது என்று அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.  

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

வாஷிங்க்டன்: வடகொரியா முழுமையாக அணு ஆயுத ஒழிப்பு செய்வதற்கு முன்னர் கொரிய போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது சாத்தியம் கிடையாது என்று அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.  

கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழலைத் தணிக்கும் பொருட்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர்  ட்ரம்ப் இருவருக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றது.

வடகொரிய தரப்பில் இத்தகைய கொரிய போர் நிறுத்த ஒப்பந்தம் சமாதானத்தினை நோக்கிய முதல்படி என்று வற்புறுத்தப்பட்ட நிலையில், அதைப் பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை என்று அமெரிக்கா தெரிவித்தது. அத்துடன் முழுமையாக அணு ஆயுத ஒழிப்பு என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.      

அப்பொழுது கொரிய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முறையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்க தரப்பில் வாய்வழி உறுதிமொழி அளிக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இரு தரப்பு பேச்சின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவதுடன், கொரிய தீபகற்பத்தில் நீடித்த அமைதியை  நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வடகொரியா முழுமையாக அணு ஆயுத ஒழிப்பு செய்வதற்கு முன்னர் கொரிய போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது சாத்தியம் கிடையாது என்று அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹித்தேர் நாரட்டின் அறிக்கையினை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 'கொரிய தீபகற்ப விவகாரத்தில் நாம் மற்ற விஷயங்களை பற்றி பேசுவதற்கு முன்னதாக முழுமையான அணு ஆயுத ஒழிப்பு என்பது நடைபெற வேண்டும்' என்று அவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.