மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

சாலையில் ஓடிய சாக்லேட் ஆறு: ஜெர்மனியில் நடந்த விநோதம் (விடியோ இணைப்பு)

ஜெர்மனியின் வெஸ்டோனேன் நகரில் உள்ள சாக்லேட் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக  சாலையில் சாக்லேட் ஆறாக ஓடிய விநோதம் நடந்துள்ளது. 

Published On :

வெஸ்டோனேன் (ஜெர்மனி): ஜெர்மனியின் வெஸ்டோனேன் நகரில் உள்ள சாக்லேட் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக  சாலையில் சாக்லேட் ஆறாக ஓடிய விநோதம் நடந்துள்ளது. 

ஜெர்மனியின் வெஸ்டோனேன் நகரில் ட்ரெய்மெய்ஸ்டெர் என்னும் சாக்லேட் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு அதிக அளவில் சாக்லேட் உற்பத்தி செய்யும் பணி நடந்து வந்தது. 

இந்நிலையில் திங்கள் இரவு தொழிற்சாலையில் அமைந்துள்ள சேமிப்புக் கலனொன்றில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறின் காரணமாக அங்கு சேமிக்கப்பட்டிருந்த 900 கிலோ எடையுள்ள சாக்லேட் குழம்பு நிரம்பி வழியத் துவங்கியது. 

பின்னர் தொழிற்சாலை வாயிலைத் தாண்டி அருகில் இருந்த சாலையின் நடைபாதையில் அந்த குழம்பு வழிந்து தரையில் இறுகத் துவங்கியது.  இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. 

இதன் காரணமாக 25 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவானது விரைந்து வந்து சாக்லேட் குழம்பை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கொதிக்கும் நீரை ஊற்றியும், அதெற்கென ஒரு சிறப்பு படையினரும் வந்து இந்த சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

சிலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரானது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.