காபுல் வெடிகுண்டுத் தாக்குதல்: 17 பேர் சாவு, 110 பேர் படுகாயம்

காபுல் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காபுல் வெடிகுண்டுத் தாக்குதல்: 17 பேர் சாவு, 110 பேர் படுகாயம்
Published on
Updated on
1 min read

ஆஃப்கானிஸ்தானில் உள்ள காபுல் நகரில் சனிக்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காபுலில் உள்ள பழைய அமைச்சர்கள் உள் அரங்கின் வெளிப்பகுதியில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக இந்த தாக்குதல் சம்பவத்தை பயங்கரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர்.

இதனால் அங்கிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 110 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு உடனடியாக விரைந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com