மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

2009க்குப் பிறகு தாய்லாந்தில் முதல் மரண தண்டனை நிறைவேற்றம்

கடந்த 2009ம் ஆண்டுக்குப் பிறகு, கொலைக் குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது தாய்லாந்து நாட்டு நீதித்துறை.

News image
Updated On :19 ஜூன் 2018, 10:35 am


பாங்காக்: கடந்த 2009ம் ஆண்டுக்குப் பிறகு, கொலைக் குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது தாய்லாந்து நாட்டு நீதித்துறை.

தீரசக் லோங்ஜி (26) என்ற கொள்ளை மற்றும் கொலைக் குற்றவாளிக்கு உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் மரண தண்டனை விதித்ததைத் தொடர்ந்து தற்போது, விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ஒருவரின் செல்போன் மற்றும் பணப்பையை பறித்துக் கொண்ட லோங்ஜி, அவரை 24 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்த குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தாய்லாந்தில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்த நிலையில், 2003ம் ஆண்டு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் 7வது நபர் லோங்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.