விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கென்யாவில் காய்கறி சந்தையில் தீ விபத்து: 15 பேர் பலி 

கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள காய்கறி சந்தை ஒன்றில் வியாழன் அன்று ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில்  15 பேர் உடல் கருகி பரிதாபமாகப் பலியாகினர்.

News image
Updated On :28 ஜூன் 2018, 9:28 am

DIN

நைரோபி: கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள காய்கறி சந்தை ஒன்றில் வியாழன் அன்று ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில்  15 பேர் உடல் கருகி பரிதாபமாகப் பலியாகினர்.

கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் பெரிய காய்கறி சந்தை ஒன்று உள்ளது. அந்த சநதையில் வியாழன்  அன்று அதிகாலை திடீர் என தீ பற்றியது. சந்தை உட்பகுதியில் பற்றிய தீ, படிப்படியாக அக்கம்பக்கம் இருந்த கட்டடங்களுக்கும் பரவியது. இந்த தீயில் சிக்கிய 15 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் சிக்கிய கட்டடங்கள் சிதைவுற்று பலவீனமாக இருப்பதால், தீயில் பலியானோரின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள தீயனைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.