திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிரிட்டன் வெடி விபத்து: மூவர் கைது

பிரிட்டன் கட்டட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்புக்கு காரணமாக கருதப்படும் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 7:31 pm

DIN

பிரிட்டன் கட்டட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்புக்கு காரணமாக கருதப்படும் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
லீசெஸ்டர் நகரின் ஹிங்லே சாலையில் உள்ள கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பல்பொருள் அங்காடி மற்றும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 
இந்த சம்பவம் தொடர்பாக, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு காரணமாக சந்தேகிக்கப்படும் 30 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கிழக்கு அங்லியா பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சம்பவம் நடந்த இடத்தில் காணப்பட்ட சூழ்நிலையை வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது விசாரணை முழுமையடையாத நிலையில் அவர்கள் குறித்து மேலும் தகவல்களை வெளியிட முடியாது. அந்த வெடிவிபத்து சம்பவம் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் சிக்கவில்லை. எனவே, அது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
கைதான மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதையடுத்து, வெடி விபத்துக்கான உண்மையான காரணம் விரைவில் தெரியவரும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.