எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ரஷ்யாவில் விமானத்தில் இருந்து மழையாகப் பொழிந்த தங்கக் கட்டிக் குவியல்! 

ரஷ்யாவில் ஒடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் இருந்து தங்கம் மற்றும் பிளாட்டின குவியல் மழையாகப் பொழிந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  

News image
Updated On :16 மார்ச் 2018, 7:22 pm IST

மாஸ்கோ: ரஷ்யாவில் ஒடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் இருந்து தங்கம் மற்றும் பிளாட்டின குவியல் மழையாகப் பொழிந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  

ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் உள்ள விமான தளம் ஒன்றிலிருந்து நிம்பஸ் விமான சேவை நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. விமானம் ஒடுதளத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளில் தங்கம்  மற்றும் பிளாட்டினக் கட்டிகள் குவியலாக விமானத்தில் இருந்து மழை போன்று ஓடுதளத்தில் விழுந்து சிதறியுள்ளது.

இது பற்றிய தகவல் விமானிக்கு தெரியப்படுத்தப்பட்டதும் விமானம் உடனடியாக அருகாமையில் உள்ள விமான நிலையம் ஒன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டது .விமானத்தில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்கள் தொலைந்துள்ளதை அடுத்து குறிப்பிட்ட  விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

குறிப்பிட்ட அந்த விமானத்தில் அனுப்பப்பட்ட சரக்குகள் அனைத்தும், ரஷ்யாவில் வைர உற்பத்திக்குப் பெயர் போன 'சிகோட்டா மைனிங் மற்றும் ஜியோலாஜிகல்' என்ற  நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். அந்த சரக்கு விமானத்தில் சுமார் 265 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டின கட்டிகள் எடுத்துச் செல்லப்பட்ட விபரம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விமானம் பழுதானது தெரியாமல் விலைமதிப்பற்ற சரக்குகளை ஏற்ற அனுமதிக்கப்பட்டதா அல்லது இதன் பின்ணணியில் கொள்ளையர்கள் கைவரிசை ஏதேனும் உள்ளதா என்பது குறித்து  விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.