பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

லிபியா தேர்தல் ஆணையம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: 11 பேர் பலி 

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தின் மீது நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.

News image
Updated On :2 மே 2018, 2:58 pm

திரிபோலி: லிபியாவின் தலைநகர் திரிபோலியில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தின் மீது நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.

லிபிய அதிபர் முகமது கடாபி  கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர் 2012ம் ஆண்டில் அந்நாட்டில் தனித்த தேர்தல் நடைமுறை உருவானது.  அந்நாட்டிலேயே சுயாட்சி தன்மையுடன் செயல்படக்  கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த  சில அமைப்புகளில் ஒன்றாக தேர்தல் ஆணையம் உள்ளது.

இந்நிலையில் தலைநகர் திரிபோலியில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தின் மீது நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.

திரிபோலியில் தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. புதனன்று அங்கு நடந்த   தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் படு காயமடைந்து உள்ளனர்.தொடர்ந்து அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.