ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வடகொரிய அதிபரை நம்பும் தென் கொரிய மக்கள்- கருத்துக் கணிப்பு வெளியீடு

இரு கொரிய அதிபர்களின் சந்திப்புக்கு பின்னர் வட கொரிய அதிபர் மீது தென் கொரிய மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :3 மே 2018, 6:23 am

இரு கொரிய அதிபர்களின் சந்திப்புக்கு பின்னர் வட கொரிய அதிபர் மீது தென் கொரிய மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏப்ரல் 27-ஆம் தேதி வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜீயின் ஆகியோர் சந்தித்துப் பேசினர். பல காலமாக தொடர்ந்து இருந்து வந்த பகைக்கு இடையே இவர்களின் இந்த சந்திப்பு உலக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இதையடுத்து வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தற்போது தென் கொரிய மக்களால் அதிகளவில் நம்பப்படுவதாக அந்நாட்டு ஊடகம் எடுத்துள்ள கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியா முழுவதும் நடத்தப்பட்ட அந்த கருத்துக் கணிப்பின் முடிவில் 78 சதவீத மக்கள் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக 17 சதவீத மக்கள் அதீத நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

அதுபோல இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாக 89 சதவீத மக்கள் நம்பிக்கை தெரிவித்ததாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.