சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

வட கொரிய அணு ஆயுத மையம் அழிப்பு

வட கொரியாவின் பங்கை-ரீ கிராமத்திலுள்ள அணு ஆயுத சோதனை மையத்தை சர்வதேச செய்தியாளர்கள் முன்னிலையில் அந்த நாடு வியாழக்கிழமை அழித்தது.

Updated On :25 மே 2018, 2:00 am IST

வட கொரியாவின் பங்கை-ரீ கிராமத்திலுள்ள அணு ஆயுத சோதனை மையத்தை சர்வதேச செய்தியாளர்கள் முன்னிலையில் அந்த நாடு வியாழக்கிழமை அழித்தது.
பல மணி நேரத்துக்கு தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகள் மூலம் அந்த மையம் அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாதக சூழலை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகள் மூலம், மக்கள் அதிகம் வசிக்காத மலைப் பகுதியான பங்கை-ரீயில் நிலத்தடி அணு ஆயுத சோதனை நடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த 3 சுரங்கங்களும், அந்த மையத்தில் அமைந்துள்ள கட்டடங்களும் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வட கொரிய அதிகாரிகள் கூறியதாவது:
அணு ஆயுத சோதனை மைய அழிப்பு, உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்கியது. 2009-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை நிலத்தடி அணு ஆயுத சோதனைக்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கு சுரங்கம் முதலாவதாக வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது.
அதையடுத்து, மதியம் 2.20 மணிக்கும், மாலை 4 மணிக்கும் முறையே மேற்கு மற்றும் தெற்கு சுரங்கங்கள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சுரங்கங்கள் தவிர, அணு ஆயுத சோதனை மையத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்கள், வீரர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த கட்டடங்களும் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. கிழக்கே அமைக்கப்பட்டிருந்த மற்றொரு சுரங்கம், கடந்த 2006-ஆம் ஆண்டு அணு குண்டு பரிசோதனைக்குப் பிறகு ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டது.
சர்வதேச அளவிலான தொலைக்காட்சி செய்தியாளர்களை அழைத்து இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதன் மூலம், அணு ஆயுத சோதனைக்குப் பயன்படுத்தப்பட்ட சுரங்கங்களும், கட்டடங்களும் தகர்க்கப்படும் காட்சிகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வட கொரியா முயன்றிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த நிகழ்ச்சியைக் கண்காணிக்க சர்வதேச அணு ஆயுத நிபுணர்களை அந்த நாடு அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.