அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

கிம் ஜோங்குடன் கியூபா அதிபர் சந்திப்பு

வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனை கியூபா அதிபர் மிகுவேல் டியாஸ்-கனேல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

மிகுவேல் டியாஸ்-கனேலுடன் கிம் ஜோங்-உன்

Updated On :6 நவம்பர் 2018, 12:51 am IST


வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனை கியூபா அதிபர் மிகுவேல் டியாஸ்-கனேல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வட கொரிய அரசுக்குச் சொந்தமான கிசிஎன்ஏ செய்தி நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கியூபா அதிபர் மிகுவேல் டியாஸ்-கனேல், அதிபர் கிம் ஜோங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சர்வதேச விவகாரங்கள் குறித்தும், தங்களுக்கிடையிலான பொதுவான நலன்கள் குறித்தும் இருவரும் ஆழமாக விவாதித்தனர்.
பல்வேறு விவகாரங்களில் இரு தலைவர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து நிலவியது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
முன்னதாக, வட கொரியத் தலைநகர் பியாங்கியாங் விமான நிலையத்தில் தனது மனைவியுடன் ஞாயிற்றுக்கிழமை வந்திறங்கிய கியூபா அதிபர் மிகுவேல் டியாஸ்-கனேலை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் நேரில் சென்று வரவேற்றார்.
டியாஸ்-கனேலுக்கு 21 குண்டுகள் முழங்க அரச வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.
இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புகள் இரண்டு முறை நடைபெற்றது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் கிம் ஜோங்-உன் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
எனினும், அந்த ஒப்பந்த அம்சங்ககளை நிறைவேற்றுவதில் வட கொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள்வதாக வட கொரியாவும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்ததால், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வரும் கம்யூனிஸ நாடான கியூபாவின் அதிபர் மிகுவேல் டியாஸ்-கனேல், வட கொரிய அதிபரை சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.