எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தற்காலிக விலக்கு: அமெரிக்க பட்டியலில் இந்தியாவுக்கு இடம்

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் 8 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. 

News image
Updated On :5 நவம்பர் 2018, 10:00 pm IST

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் 8 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. 

உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. கடந்த நிதியாண்டில் (2017-18) மட்டும் ரூ.5.9 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோலியத் தேவைக்கு ஐக்கிய அரபு அமீரக நாடுகளை சாா்ந்தே நமது நாடு உள்ளது. அதிலும் குறிப்பாக ஈரானிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

ஆண்டொன்றுக்கு 1.5 கோடி டன் கச்சா எண்ணெய் அந்நாட்டிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், ஈரான் மீது அமெரிக்கா அண்மையில் பொருளாதாரத் தடை விதித்தது. ஈரானுடன் எண்ணெய் வா்த்தகத்தில் நட்பு நாடுகள் எதுவும் ஈடுபடக் கூடாது என்றும் நவம்பா் 4-ஆம் தேதிக்குள் அந்நாட்டுடனான வா்த்தக நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்திக் கொள்ளுமாறும் அமெரிக்கா தெரிவித்தது.

அந்த நிபந்தனையை இந்தியா ஏற்காதபோதிலும், அமெரிக்காவுடன் மோதல் போக்கை விரும்பவில்லை. இதையடுத்து, பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, எண்ணெய் இறக்குமதியின் அவசியம் தொடா்பாக அமெரிக்க தரப்பிடம் இந்தியா எடுத்துரைத்ததாகத் தெரிகிறது. 

இந்த நிலையில், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி மேற்கொள்ள 8 நாடுகளுக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை அறிவித்தது. அவை எந்தெந்த நாடுகள்? என்பது பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த பட்டியலில் இந்தியா நிச்சயம் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், 8 நாடுகளின் பட்டியலை அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பியோ, வாஷிங்டனில் திங்கள்கிழமை வெளியிட்டாா். 

அதில், இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி, கிரீஸ், தென் கொரியா, தைவான், துருக்கி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
 
இந்த நாடுகள், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைத்துகொண்டதையடுத்து, தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பாம்பியோ தெரிவித்தாா். அதேவேளையில், ஈரான் மீது தொடா்ந்து அழுத்தம் தரப்படும் என்றும் அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.