சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

இந்தோனேஷியாவுக்கு 1 மில்லியன் டாலர்கள் நிவாரணம்: கூகுள் நிறுவனம் சார்பில் சுந்தர் பிச்சை அறிவிப்பு

இந்தோனேஷிய பேரழிவுக்கு கூகுள் நிறுவனம் சார்பில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று சுந்தர் பிச்சை அறிவித்தார். 

News image
Updated On :2 அக்டோபர் 2018, 1:06 pm

இந்தோனேஷிய பேரழிவுக்கு கூகுள் நிறுவனம் சார்பில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று சுந்தர் பிச்சை அறிவித்தார். 

இந்தோனேஷியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஏற்பட்ட பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,234 - ஆக அதிகரித்துள்ளது. மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இந்தோனேஷியாவுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிவாரணத்தொகையை கூகுள் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் என அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்தார். 

மேலும், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பேரழிவு எங்களுக்கு மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கூகுள் நிறுவனம் சார்பில் நிவாரணத்தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்று சுந்தர் பிச்சை ட்விட்டர் மூலமாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் கூகுள் சார்பில் முன்னெச்சரிக்கை செயலி அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.