தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க அதிபர் சிறிசேனா உத்தரவு  

இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்குமாறு ராணுவத்திற்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:29 pm IST

கொழும்பு: இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்குமாறு ராணுவத்திற்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்குமிடையே ஏறக்குறைய 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தமானது கடந்த 2009-ஆம் ஆண்டு, புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. 

ஆனால் போரின் பொழுது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்களின் நிலங்களை ராணுவம் கைப்பற்றியது. அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகள் போருக்குப் பின்பும் ராணுவத்தால் விடுவிக்கப்படவில்லை. 

அந்த நிலங்களில் ராணுவம் முகாம்களை அமைத்ததுடன் பல்வேறு தடுப்புக் காவல்களையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவிக்க வேண்டும் என்று இலங்கை கிழக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு பிராந்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள் இலங்கை அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். 

இந்நிலையில் இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்குமாறு ராணுவத்திற்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

புதனன்று வடக்கு பிராந்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்  உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன், இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி தமிழர்களின் நிலப்பகுதிகளை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக விடுவிக்க வேண்டும் என்று ராணுவத்திற்கு அதிபர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.