கொழும்பு: இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்குமாறு ராணுவத்திற்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்குமிடையே ஏறக்குறைய 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தமானது கடந்த 2009-ஆம் ஆண்டு, புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
ஆனால் போரின் பொழுது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்களின் நிலங்களை ராணுவம் கைப்பற்றியது. அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகள் போருக்குப் பின்பும் ராணுவத்தால் விடுவிக்கப்படவில்லை.
அந்த நிலங்களில் ராணுவம் முகாம்களை அமைத்ததுடன் பல்வேறு தடுப்புக் காவல்களையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவிக்க வேண்டும் என்று இலங்கை கிழக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு பிராந்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள் இலங்கை அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்குமாறு ராணுவத்திற்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதனன்று வடக்கு பிராந்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன், இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழர்களின் நிலப்பகுதிகளை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக விடுவிக்க வேண்டும் என்று ராணுவத்திற்கு அதிபர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

ஃபிஃபா உலகக் கோப்பை: முதல் அணியாக அடுத்த சுற்றுக்குத் தேர்வான மெக்சிகோ!

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது?

வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



