47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் பயணம் 

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி ஜப்பான் செல்ல உள்ளார். 

News image
Updated On :12 அக்டோபர் 2018, 3:21 pm

DIN

புது தில்லி: இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி ஜப்பான் செல்ல உள்ளார். 

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த மாநாட்டில் இருநாடுகளின் பிரதமர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்துவது நடைமுறையாக உள்ளது.

அந்தவகையில் கடந்த ஆண்டிற்கான உச்சி மாநாடு இந்தியாவில் குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியா வந்திருந்தார்.

அதேபோல இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி டோக்கியோ செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.