புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

அகதிகள் விவகாரம்: 3 நாடுகளுக்கு அமெரிக்க நிதியுதவி குறைப்பு

கெளதமாலா, ஹோண்டுரஸ், எல்-சால்வடார் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைக்கவிருப்பதாக அமெரிக்க

News image
Updated On :22 அக்டோபர் 2018, 8:05 pm


கெளதமாலா, ஹோண்டுரஸ், எல்-சால்வடார் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அந்த 3 நாடுகளையும் சேர்ந்த அகதிகள்தான், வாகனங்கள் மூலம் அமெரிக்காவுக்குள் அதிக எண்ணிக்கையில் வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் டொனால் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
தங்கள் நாட்டு மக்கள், எல்லை கடந்து அமெரிக்காவுக்கும் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கெளதமாலா, ஹோண்டுரஸ், எல்-சால்வடார் ஆகிய 3 நாடுகளும் போதிய அளவில் மேற்கொள்ளவில்லை. எனவே, அந்த நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்படும் என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.