வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான பான்முன்ஜோம் எல்லைப் பகுதியில், இரு தரப்பினரும் குவித்துள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தை திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது.
இதுகுறித்து தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் படை விலக்கல் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அந்தக் கூட்டம் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட - தென் கொரிய நாடுகளிடையே இடையிலான பான்முன்ஜோம் எல்லை கிராமம் கூட்டு பாதுகாப்புப் பகுதி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 250 கி.மீ. தொலைவு கொண்ட அந்த எல்லைப் பகுதியில்தான் இரு நாட்டுப் படையினரும் நேருக்கு நேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் பொதுவான பகுதி என்று அந்த எல்லைப் பகுதி அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடந்த 1976-ஆம் ஆண்டில் தென் கொரியத் தொழிலாளர்களை வட கொரிய வீரர்கள் தாக்கியதிலிருந்து இரு நாட்டு வீரர்களும் இங்கு பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அண்மைக் காலமாக இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் சமரச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பான்முன்ஜோம் எல்லை கிராமத்தில் நிறுத்தப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்த பேச்சுவாத்தை அந்த கிராமத்தில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது .
இதில் வட மற்றும் தென் கொரிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கொரியப் பகுதிக்கான ஐ.நா. பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிலையில், அந்தப் பேச்சுவார்த்தையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் தற்போது மீண்டும் அந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு

சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை
சுட்டெரிக்கும் சூரியன்!

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


