நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ராணுவத்தினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: நைஜீரியாவின் வடக்கு மாகாணமான போர்னோவில் உள்ள ஸரி கிராமத்தில் ராணுவத்தினர் அமைத்திருந்த முகாமை குறிவைத்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் சிலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயந்தது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏராளமான லாரிகளில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை குறிவைத்து அந்தத் தாக்குதலை நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
நைஜீரியாவில் அண்மைக் காலமாக போகோ ஹரம் பயங்கரவாதிகள் ராணுவ நிலைகளை குறிவைத்து அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

ராகுல்காந்தி நாளை குளச்சல், நான்குனேரியில் பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

