திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

நைஜீரியா: போகோ ஹராம் தாக்குதல்: பலி 48-ஆக உயர்வு

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ராணுவத்தினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்துள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:18 pm


நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ராணுவத்தினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: நைஜீரியாவின் வடக்கு மாகாணமான போர்னோவில் உள்ள ஸரி கிராமத்தில் ராணுவத்தினர் அமைத்திருந்த முகாமை குறிவைத்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் சிலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயந்தது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏராளமான லாரிகளில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை குறிவைத்து அந்தத் தாக்குதலை நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
நைஜீரியாவில் அண்மைக் காலமாக போகோ ஹரம் பயங்கரவாதிகள் ராணுவ நிலைகளை குறிவைத்து அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.