சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சார்பில் முதல்முறையாக இரண்டு வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். அவர்களது பெயரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும் வெளியிட்டுள்ளார்.
ஹஸ்ஸா அல்-மசூரி (34), சுல்தான் அல் நேயாதி (37) ஆகிய அந்த இரு வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிர்கால சந்ததியினருக்கு முன்னோடியாக திகழ்வர்' என்று சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 4 பேர், அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படுவர் என்றும், இதற்காக 5.4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38,000 கோடி) செலவிலான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஷேக் முகமது கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஹோப்' என்ற பெயரிலான திட்டம் 2021-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என்று யுஏஇ ஏற்கெனவே அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஆய்வு

பரமசிவன் மலைக் கோயில் சித்திரை திருவிழா நிறைவு

சோழவந்தான் திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

மதுரை மாவட்டத்தில் 3,079 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

