

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ அருகே மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கீழே விழும் போது அவன் முகத்தில் குத்திய முள்கரண்டி பின் கழுத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்தது.
சேவியர் கன்னிங்கம் என்ற 10 வயதுச் சிறுவன் மரத்தில் இருந்து விழுந்ததில், கீழே இருந்த இறைச்சிகளைக் குத்தி வைக்கும் கரண்டி, மூக்குக்கு மேல் குத்தி பின் கழுத்து வழியாக வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடித்தனர். உடலின் ஒரு பக்கத்தில் குத்தி மறுபக்கத்தில் வெளியே வந்த கரண்டி, அவனது மூளையையோ, முதுகுத் தண்டையோ, கண் பகுதியையோ, முக்கிய நரம்புகள் எதையுமோ சீண்டவே இல்லை.
நூலிழையில் எதையும் தொட்டுக் கொள்ளாமல் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக சிறுவன் உயிர் பிழைத்து, தற்போது குணமடைந்து வருகிறான். இவன் நிச்சயம் கோடியில் ஒருவன் என்று ஆச்சரியத்தோடு கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.