காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரூ. 1,849 கோடி ஊழல் வழக்கு: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது

ரூ. 1,849 கோடி அளவில் ஊழல் செய்த வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :19 செப்டம்பர் 2018, 2:53 pm

DIN

கோலாலம்பூர்: ரூ. 1,849 கோடி அளவில் ஊழல் செய்த வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளார். 

மலேசியாவில் கடந்த மே மாதம் நடந்த நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அங்கு 60 ஆண்டுகளாக  ஆட்சி புரிந்து வந்த 'பேரிசன் நேஷனல் கூட்டணி' படுதோல்வி அடைந்தது. நஜிப் ரசாக் பிரதமர் பதவியை இழந்தார். 92 வயதான எதிர்கட்சித் தலைவர் மகாதீர் மீண்டும் முகமது பிரதமர் ஆனார். 

இந்த நிலையில் மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை நஜிப் ரசாக் பிரதமராக இருந்த பொழுது முறைகேடாக பயன்படுத்தி சொத்துக்குவிப்பில் ஈடுபட்டார் என்று அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடந்தது. 

விசாரணையின் ஒரு பகுதியாக, அவருக்கு சொந்தமான கட்டிடங்களில் மலேசிய ஊழல் தடுப்பு படையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், 273 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,856 கோடி) மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டன. அதில் ஊழலில் தொடர்பு உடையதாக கருதப்படுகிற 272 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,849 கோடி) டெபாசிட்டுகளுடன் கூடிய 408 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. 

இதுதொடர்பாக நஜிப் ரசாக்கிடமும், அவரது மனைவி ரோஸ்மா மன்சோரிடமும் ஊழல் தடுப்பு படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நஜிப் ரசாக் புதன் மதியம் கோலாலம்பூரில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.