அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

14 மைல்கள் நடந்தே வந்து பணி செய்த ஹோட்டல் பெண் ஊழியருக்கு கிடைத்த பம்பர் பரிசு!

பெயர் வெளியிடாத தம்பதியினர் டெக்சாஸில் உள்ள ஹோட்டல் பணியாளர் ஒருவருக்கு புதுக் காரை பரிசளித்துள்ளனர்.

News image
Updated On :8 டிசம்பர் 2019, 1:10 pm IST

பெயர் வெளியிடாத தம்பதியினர் டெக்சாஸில் உள்ள ஹோட்டல் பணியாளர் ஒருவருக்கு புதுக் காரை பரிசளித்துள்ளனர். தினமும் வேலைக்குச் செல்வதற்காக 14 மைல் நடந்து வரும் அவரது நிலையைப் பார்த்து, காரை அன்புப் பரிசாக அனுப்பி வைத்த நிகழ்ச்சி அண்மையில் நடந்துள்ளது.

கால்வெஸ்டனில் உள்ள டென்னிஸ் டைனர் என்ற ஹோட்டலில் பணிபுரிந்து வருபவர் அட்ரியன்னா எட்வர்ட்ஸ். இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில்: 'நான் இன்னும் கனவிலிருந்து மீண்டு வரவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, நான் என் ஜன்னலை எட்டிப் பார்க்கிறேன்.  வெளியே அந்தக்  கார் அங்குதான் இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக் கொள்கிறேன்’என்றார்.

அன்று அட்ரியன்னா எட்வர்ட்ஸ் வழக்கம் போல் வேலைக்கு வந்தபோது, காலை உணவுக்காக தனது பிரிவில் ஒரு தம்பதியினர் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர்களுக்கு உணவு பறிமாறியுள்ளார். பேச்சினூடே தான் கார் வாங்குவதற்காக பணம் சேமித்துக் கொண்டிருப்பதையும், தினமும் நான்கு மணி நேரம் வீட்டிலிருந்து நடந்துதான் வேலைக்கு வருவதையும் பகிர்ந்துள்ளார்.  நெடுந்தொலை நடந்து வந்துதான் எட்வர்ட்ஸ் காருக்கான பணத்தை சேர்த்து வருகிறார் என்பதை அத்தம்பதியர் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

Story image

அதன் பின் அந்தத் தம்பதி உணவுக்கான பணத்தைச் செலுத்திவிட்டு கிளம்பிச் சென்றனர்.  சில மணி நேரத்துக்குப் பிறகு '2011 நிசான் சென்ட்ரா' கார்ச் சாவியுடன் 'கிளாசிக் கால்வெஸ்டன் ஆட்டோ குழுமத்தின்’ பணியாளர் ஒருவர் எட்வர்ட்ஸை அணுகினார். இது உங்களுக்காக இன்று காலை உணவருந்திய தம்பதியர் பரிசளித்தது என்று சொன்ன நொடியில் சந்தோஷத்தில் வாயடைத்து திக்கு முக்காடிவிட்டார் எட்வர்ட்ஸ்.  ஆனால் காரை பரிசளித்த தம்பதி தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை என்றும் அவர்களது ஒரே நிபந்தனை எட்வர்ட்ஸ் எப்போதும் போல கனிவுடன் அனைவரிடமும் பழக வேண்டும் என்பது மட்டுமே என்று கார் நிறுவனப் பணியாளர் கூறினார்.

Story image

மனம் நெகிழ்ந்த எட்வர்ட்ஸ், ’நான் ஒரு நாள் பொருளாதாரரீதியாக நல்ல நிலைக்கு வந்தால், நிச்சயம் தேவைப்படுவோர்களுக்கு உதவுவேன்.’ என்றார். முன்பு வீட்டிலிருந்து ஹோட்டலுக்கு வர நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஆன நிலையில் தற்போது எட்வர்ட்ஸ் புதுக் காரில் ஜம்மென்று அரை மணி நேரத்தில் வேலைக்கு வந்துவிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.