மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரிட்டன் தேர்தல்: இந்திய வம்சாவளியினர் பெரிய அளவில் வெற்றி

இங்கிலாந்து தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

News image
Updated On :13 டிசம்பர் 2019, 10:38 am

DIN

லண்டன்: இங்கிலாந்து தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆளும் கன்சர்வேடிவ் மற்றும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிகள் இரண்டிலிருந்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இங்கிலாந்து பொதுத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரிதி படேல் தனது வித்தம் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக என்னை மீண்டும் தேர்ந்தெடுத்த வித்தம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி. நான் தொடர்ந்து உங்கள் வலுவான குரலாக இருப்பேன், தொகுதி முழுவதிலும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் ஆதரவாக நிற்கிறேன்" என்று படேல் வெள்ளிக்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

தென்மேற்கு ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சியின் ககன் மொஹிந்திரா வெற்றி பெற்றுள்ளார்.

1935ம் ஆண்டுக்குப் பின் தொழிற்கட்சி அதன் மோசமான தேர்தல் முடிவுகளை சந்தித்திருந்தாலும், அக்கட்சியின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் முதல் சீக்கிய பெண் எம்.பி.யாக 2017 தேர்தலில் வரலாறு படைத்த ப்ரீத் கவுர் கில் தனது எட்ஜ்பாஸ்டன் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

முதல் தலைப்பாகை அணிந்த சீக்கிய எம்.பி.யான தன்மஞ்சீத் சிங் தேசி, 29,421 இடங்களைப் பெற்று பெர்க்ஷயர் தொகுதியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

வீரேந்திர சர்மா 2007 முதல் அவர் வகித்து வந்த தனது ஈலிங் சவுத்தால் தொகுதிக்கான இருக்கையைத் தக்க வைத்துக் கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.