ஈரான் ராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் திடீரென விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கிர்கிஸ்தானின் பிஸ்கெக் என்ற இடத்திலிருந்து இறைச்சியை ஏற்றிக் கொண்டு வந்த ராணுவ விமானம் ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே விழுந்து நொறுங்கியது. இதில், அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 15 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு விமானப் பொறியாளர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
விபத்துக்குள்ளான விமானம் போயிங் கார்கோ 707 வகையைச் சேர்ந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஃபாத் விமான நிலையத்தில் அந்த விமானம் திங்கள்கிழமை காலை தரையிறங்க முற்பட்டது.
அப்போது, மோசமான வானிலையால், விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி முள்வேலி மீது மோதி தீப்பிடித்து அருகில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை ஆராய்ந்த பிறகே விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள்தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தினா் 18 போ் காயம்

வண்டல் மண் எடுக்க அனுமதி மறுத்த கோட்டாட்சியா், சத்தி வட்டாட்சியரைக் கண்டித்து கோபியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்







