தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காபூலில் அடுத்தடுத்து 3 வெடிகுண்டு சம்பவம்: 5 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

News image
Updated On :25 ஜூலை 2019, 6:59 am

DIN


காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இன்று காலை 8.10 மணியளவில் முதல் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. கிழக்குக் காபூல் பகுதியில் ஓடிக் கொண்டிருந்த பேருந்து மீது தற்கொலைப் படையைச் சேர்ந்த இளைஞர் வெடிகுண்டுகள் நிரப்பிய ஒரு மோட்டார் சைக்கிளைக் கொண்டு வந்து இடித்ததில் மிகப் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரு இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

கடந்த வாரம் காபூலில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஏராளமானோர் பலியான நிலையில், இன்று மீண்டும் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.