ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையின் மூலம் பெர்லினைச் சேர்ந்த எச்ஐவி பாதித்த நபர் அந்நோயில் இருந்து முற்றிலும் விடுபட்டிருக்கும் 2வது மனிதராக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த டிமோதி ரெய் ப்ரவுன் என்பவருக்கு ஜெர்மனியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது வரை எச்ஐவி தொற்று இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.
அது முதல் ப்ரவுன் ஒருவர் மட்டுமே எச்ஐவி பாதித்து அதில் இருந்து முற்றிலும் விடுபட்ட ஒரே மனிதராக அறியப்பட்டு வந்தார்.
இந்த ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை என்பது மிகவும் அபாயத்துக்குரிய சிகிச்சையாகவும், பல நோயாளிகளுக்கு செய்து தோல்வி அடைந்த முறையாகவும் இருக்கிறது.
தற்போது இரண்டாவது நோயாளிக்கு இந்த சிகிச்சை முறை பலனளித்திருக்கிறது. எனினும் அவரது அடையாளம் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் எச்ஐவி க்கு மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கருத முடியாது. எனினும், அதனை ஒழிக்க ஒரு பாதை இருக்கிறது. அதை வெற்றிப்பாதையாக மாற்ற இன்னும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதே இதன் மூலம் தெரிய வரும் செய்தியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம்

குழந்தைகளை தமிழ் அன்பா்களாக உருவாக்க வேண்டும்: முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம்!

ஆட்டோ மீது காா் மோதல்: 10 போ் காயம்

சித்திரைத் திருவிழா: பாதுகாப்பு பணியில் 5,000 மேற்பட்ட போலீஸாா்! ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


