கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசுப் படைகளுடன் மோதல்: ஆப்கனில் 2 தளபதிகள் உட்பட 52 தலிபான்கள் பலி

அரசுப் படைகளுடன் நிகழ்ந்த மோதலில், ஆப்கனிஸ்தானில் இரண்டு தளபதிகள் உட்பட 52 தாலிபான்கள் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :5 மே 2019, 1:32 pm

DIN

காபுல்: அரசுப் படைகளுடன் நிகழ்ந்த மோதலில், ஆப்கனிஸ்தானில் இரண்டு தளபதிகள் உட்பட 52 தாலிபான்கள் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே நீண்டகாலமாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.

அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு பயங்கரவாத குழுக்களுக்கு அந்நாட்டின் அதிபர் விடுத்த அழைப்பும் தோல்வியில் முடிந்து விட்டது.

இந்நிலையில் அரசுப் படைகளுடன் நிகழ்ந்த மோதலில், ஆப்கனிஸ்தானில் இரண்டு தளபதிகள் உட்பட 52 தாலிபான்கள் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து அந்நாட்டு ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் அபு காலித் மற்றும் சர்ஹாதி ஆகிய 2 தலிபான் தளபதிகள் உள்பட 52 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.

இந்த தகவலை அந்நாட்டு ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.