பாகிஸ்தானில் வழிபாட்டுத் தலம் அருகே குண்டுவெடிப்பு: 8 பேர் சாவு
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பிரபல வழிபாட்டுத் தலத்தின் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பிரபல வழிபாட்டுத் தலத்தின் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருவதால் லாகூரில் உள்ள பிரபலமான டேடா தர்பாரின் வெளியே புதன்கிழமை காலை குண்டுவெடித்தது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 24 பேர் பலத்த காயமடைந்தனர். உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பாக். போலிஸ் வாகனத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டாலும், அதன் தாக்கம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் குண்டுவெடிப்பு முறை, காரணம் உள்ளிட்டவை குறித்து முழுமையான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதுகுறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, 2010-ஆம் ஆண்டு இதே இடத்தில் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...