

2019ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், 2019ம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு பெற தேர்வானவர்களின் விவரங்களை தேர்வுக் குழுவினர் வெளியிட்டனர்.
அதில், மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவின் ஜான் பி குட்எனாஃப், ஸ்டான்லி விட்டிங்காம், ஜப்பானைச் சேர்ந்த அகிரோ யோஷினோ ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றில் பயன்படுத்தப்படும், மீண்டும் சார்ஜ் செய்யும் வசதி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு, மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியைக் கண்டுபிடித்த மூவருக்கு வேதியியல் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.