6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலை நாடுகளின் இனவேறு பாகுபாட்டுக்கு 50 நாடுகள் கண்டனம்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 42 ஆவது கூட்டத்தில் செப்டம்பர் 24-ஆம் நாள் இனவெறிவாதம் மற்றும் இனவெறிப் பாகுபாடு பிரச்சினை தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டது. 

News image
Updated On :25 செப்டம்பர் 2019, 9:14 am

DIN

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 42 ஆவது கூட்டத்தில் செப்டம்பர் 24-ஆம் நாள் இனவெறிவாதம் மற்றும் இனவெறிப் பாகுபாடு பிரச்சினை தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டது. 

சீனா, அரபு நாடுகள், ரஷியா, பாகிஸ்தான், மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 50க்கும் அதிகமான நாடுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் உரைநிகழ்த்தியபோது, மேலை நாடுகளில் நிலவும் இனவெறிவாதம், இனவெறிப் பாகுபாடு, பகைமைக் கூற்று, குடியேறுவோரின் உரிமை மீறல் முதலிய மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டினர்.

தவிர, அமெரிக்கா, நியூசிலாந்து முதலிய நாடுகளில் பகைமைக் கூற்றின் பரவல் காரணத்தால் குடியேறுவோர் போன்ற சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் வன்முறைச் செயலை மெக்சிகோ உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் தங்களின் உரையில் சாடினார். 

சில நாடுகளின் சமூகப் பிரமுகர்கள், அரசியல் நோக்கத்திற்காக பாகுபாட்டையும் அந்நிய எதிர்ப்பையும் தூண்டுவதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.