மேலை நாடுகளின் இனவேறு பாகுபாட்டுக்கு 50 நாடுகள் கண்டனம்
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 42 ஆவது கூட்டத்தில் செப்டம்பர் 24-ஆம் நாள் இனவெறிவாதம் மற்றும் இனவெறிப் பாகுபாடு பிரச்சினை தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டது.


ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 42 ஆவது கூட்டத்தில் செப்டம்பர் 24-ஆம் நாள் இனவெறிவாதம் மற்றும் இனவெறிப் பாகுபாடு பிரச்சினை தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டது.
சீனா, அரபு நாடுகள், ரஷியா, பாகிஸ்தான், மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 50க்கும் அதிகமான நாடுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் உரைநிகழ்த்தியபோது, மேலை நாடுகளில் நிலவும் இனவெறிவாதம், இனவெறிப் பாகுபாடு, பகைமைக் கூற்று, குடியேறுவோரின் உரிமை மீறல் முதலிய மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டினர்.
தவிர, அமெரிக்கா, நியூசிலாந்து முதலிய நாடுகளில் பகைமைக் கூற்றின் பரவல் காரணத்தால் குடியேறுவோர் போன்ற சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் வன்முறைச் செயலை மெக்சிகோ உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் தங்களின் உரையில் சாடினார்.
சில நாடுகளின் சமூகப் பிரமுகர்கள், அரசியல் நோக்கத்திற்காக பாகுபாட்டையும் அந்நிய எதிர்ப்பையும் தூண்டுவதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...