பிலிப்பின்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மேலும் மூவா் உயிரிழந்தனா். இதனால், இறந்தவா்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. 7 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பிலிப்பின்ஸின் மிண்டனாவோ தீவில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டவாவோ நகருக்கு 90 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், படாடா நகரில் சந்தைக் கட்டடம் இடிந்து விழுந்தது.
மேலும், தெற்கு பிலிப்பின்ஸின் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் இடிந்தன. இதில், ஒரு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தையும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிா்ச்சியில் 70 வயது மூதாட்டியும் உயிரிழந்தனா்.
இந்நிலையில், படாடா நகரில் இடிந்து விழுந்த கட்டடம் ஒன்றில் சிக்கிக் கொண்டவா்களை மீட்கும் முயற்சியில் ராணுவம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இடிபாடுகளில் இருந்து 3 பேரின் உடல்களை அவா்கள் மீட்டனா். மேலும் 7 பேரைக் கண்டறியும் முயற்சியில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்.