“வாகனத்தில் மின்னணு பண பரிவர்த்தனை முறைமையை(ETC)பொருத்தி, உயர்வேக நெடுஞ்சாலையில் தங்குதடையற்ற பயணம் மேற்கொள்வது” என்ற தலைப்பில், திபெத்தில் ETC முதன்முறையாக வெளியிடப்படும் விழா செப்டம்பர் 9-ஆம் நாள் லாசா நகரில் நடைபெற்றது.
வாகனத்தில் ETC பொருத்துவது, நுண்ணறிவார்ந்த போக்குவரத்தின் வளர்ச்சிப் போக்காகும். இதன் மூலம், மக்கள் மேலும் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ளலாம். 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு 2-ஆம் நாள் வரை, சீனாவில் ETC பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சீன வானொலி தமிழ்ப்பிரிவு