சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கொவைட்-19 நோயை எதிர்த்துப் போராடுவதில் பொது மக்களின் கூட்டு முயற்சி

கொவைட்-19 நோய் என்பது, சீனா மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், பரவல் வேகம், பரவல் அளவு,

News image
Updated On :27 ஏப்ரல் 2020, 10:21 am

DIN

கொவைட்-19 நோய் என்பது, சீனா மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், பரவல் வேகம், பரவல் அளவு, தடுப்பு மற்றும் காட்டுபாட்டிலுள்ள இன்னல் ஆகியவை வரலாற்றில் கண்டிராத திடீர் பொது சுகாதார பேரிடராகும். இத்தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில், சீனா குறுகிய நேரத்தில் வெற்றிகரமாகவும் பயனுள்ள முறையிலும் இதைச் சமாளித்தது பற்றி சர்வதேச சமூகப் பிரமுகர்கள் பலர் ஆய்வு செய்து வருகின்றனர். உண்மையில், இந்தக் காரணம் மிகவும் எளிமை. அனைத்தும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும், அனைத்தும் மக்களைச் சார்திருக்க வேண்டும் என்ற கோட்பாடு தான் இது.

கடந்த ஜனவரி 23-ஆம் நாள், ஒரு கோடியே 10இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரில் அனைத்து போக்குவரத்துக்கும் தடைவிதித்து நகரை முடக்க சீனா உத்தரவு பிறப்பித்தது. மனித குலத்தின் வரலாற்றில் மிக பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட பொது சுகாதார ரீதியிலான இந்த முடக்கு நடவடிக்கை, இந்நோயின் பரவலைத் தடுத்து கட்டுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

அமெரிக்காவின் “அறிவியல்”எனும் இதழ் மார்ச் 6-ஆம் நாள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில், சீனாவின் இந்த உத்தரவினால், கொவைட்-19 சீனப் பெருநிலப்பகுதியில் பரவிய போக்கு 3 முதல் 5 நாட்களாக தாமதமாக செய்யப்பட்டது. வுஹானுக்கு வருவதற்கான அனைத்து பயணங்களையும் சீனா தடை செய்ததால், கடந்த பிப்ரவரி திங்களின் மத்திய பகுதி வரை, வுஹான் நகரை தவிர பிற இடங்களில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 80விழுக்காடு குறைந்தது. 

இதனிடையில், சீனா கொவைட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில், மருத்துவ மனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த இரு இடங்களிலும் எதையும் பொருட்படுத்தாமல், ஒற்றுமை, அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவை வெளிப்படுத்தப்பட்டன.

“மாபெரும் பொறுப்பு உணர்வு” என்ற தலைப்பில் சீனாவின் ஒரு விநியோகஸ்தரின் நிழற்படத்தை, கடந்த மார்ச் 19-ஆம் நாள் டைம்ஸ் இதழ் முதல் பக்கத்தில் வெளியிட்டது. இவர் போன்றோர்கள் அபாயத்தைப் பொருட்படுத்தாமல், பொருட்களை விநியோகிக்காவிட்டால், பலரும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையில் சிக்கி, நோயாளிகள் உயிரைக் காக்கும் மருந்துகளைப் பெற முடியாமல் போயிருக்கும் என்று இந்த இதழில் தெரிவிக்கப்பட்டது. உண்மையில், குடியிருப்பு பணியாளர்கள், தொண்டர்கள், தொழிலாளர்கள் போன்ற சீனாவின் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த பொது மக்கள், தங்களது பணியில் ஈடுபட்டு, வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர். 140கோடி மக்களின் கூட்டு முயற்சியுடன், கொவைட்-19 நோய் சீனாவில் பயனுள்ள முறையில் கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.