ரஷியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 28,145 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கடந்த சில நாள்களாக ரஷியாவிலும் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அந்த நாடு 4-ஆவது இடத்தில் உள்ளது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிததாக 28,145 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரஷியாவில் ஒரேநாளில் பதிவான உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,75,546ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரேநாளில் கரோனாவுக்கு 554 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 41,607ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 29,502 பேர் குணடைந்தனர். இதுவரை மொத்தம் 18,59,851 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு

ஆரணி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

நாமக்கல் மாவட்டத்தில் 13,23,753 வாக்காளா்கள்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


