பிரேசில்: 1,75,000-ஐ தாண்டியது கரோனா பலி

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1,75,000-ஐ தாண்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1,75,000-ஐ தாண்டியுள்ளது.
கரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும்,
இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 
அதில் பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1,75,000-ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 755 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,75,270ஆக உயர்ந்துள்ளது. 
அதேவேளையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 50,434 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,87,084ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com