ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பயங்கரவாத ஆதரவாளர்களின் பட்டியல்  சூடான் பெயரை  நீக்கியது அமெரிக்கா

சூடானை அமெரிக்க பயங்கரவாத ஆதரவாளர்களின் பட்டியலில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கிவிட்டதாக சூடான் தலைநகரான கர்தூமில் அமெரிக்க தூதரகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 

News image
Updated On :15 டிசம்பர் 2020, 1:13 am

DIN

கெய்ரோ: சூடானை அமெரிக்க பயங்கரவாத ஆதரவாளர்களின் பட்டியலில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கிவிட்டதாக சூடான் தலைநகரான கர்தூமில் அமெரிக்க தூதரகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பின் மூலம் சர்வதேச அளவில் கடன்தொகையை பெறவும், அதன் பொருளாதாரத்தைப் புதுப்பித்துக் கொள்ளவும், இதன் மூலம் சூடானின் பரிதாப நிலையை முடிவுக்கு கொண்டு வரவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ கையெழுத்திட்ட அறிவிப்பு குறித்து கர்தூமில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முகநூல் பதிவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சூடான் கடந்த 1990- ஆம் ஆண்டு அல்- காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. மேலும், காஸா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கு ஈரான் மூலமாக ஆயுதங்களை சப்ளை செய்வதிலும் சூடான் முக்கியப் பங்கு வகித்து வந்ததாக நம்பப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.