இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கரோனா அச்சுறுத்தல்: தென்னாப்பிரிக்க விமானங்களுக்கு ஹாங்காங் தடை

புதிய வகை கரோனா பரவலின் அச்சுறுத்தல் காரணமாக தென்னாப்பிரிக்க விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
கரோனா அச்சுறுத்தல்: தென்னாப்பிரிக்க விமானங்களுக்கு ஹாங்காங் தடை
Updated On :25 டிசம்பர் 2020, 11:32 am

DIN

புதிய வகை கரோனா பரவலின் அச்சுறுத்தல் காரணமாக தென்னாப்பிரிக்க விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தீநுண்மியின் புதிய ரகமொன்று அண்மையில் பிரிட்டனில் கண்டறியப்பட்டது. அந்தப் புதிய ரகத் தீநுண்மி, முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடை விதித்தன. அதேபோல் தென்னாப்பிரிக்காவிலும் புதிய வகை கரோனா தொற்று பரவி வருவதாகக் கண்டறியப்பட்ட நிலையில் அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடை விதித்து வருகின்றன.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க விமானங்களுக்கு தற்காலிகத் தடை விதித்து ஹாங்காங் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கடந்த திங்கள்கிழமை முதல் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.