சிரியாவில் 3 பேருந்துகள் மீது பயங்கரவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
ஈராக்கின் எல்லையான சிரியாவின் கிழக்கு டெய்ர் அஸ் சோர் மாகாணத்தில் உள்ள பிரதான சாலையில் சிரியப் படைவீரர்களை அழைத்துச் சென்ற பேருந்துகள் மீது புதன்கிழமை பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் 25 பேர் கொல்லப்பட்டனர். வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது ஐ.எஸ். பயங்கரவாதக் குழு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிரியாவின் முக்கிய பகுதிகளை இழந்த பின்னர், ஐ.எஸ் தீவிரவாதிகள் கிழக்கு சிரியாவில் உள்ள பாலைவன பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். எனினும் அவர்கள் அவ்வப்போது ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவத் தளங்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


