கரோனா வைரஸ் 9 நாட்கள் வரை உயிர்பிழைத்திருக்கும்
சீனாவில் சுமார் 700க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியிருக்கும் கரோனா வைரஸ், காற்றிலோ, தரையிலோ கூட 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.


லண்டன் : சீனாவில் சுமார் 700க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியிருக்கும் கரோனா வைரஸ், காற்றிலோ, தரையிலோ கூட 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹாஸ்பிடல் இன்ஃபெக்சன் இதழில் கரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், சராசரியாக அவை 4 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும்.
குறைந்த வெப்பநிலை, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதன் ஆகியவை, கரோனா வைரஸின் வாழ்நாளை அதிகரிக்கும் என்று ஹைஜீன் அன்ட் என்விரான்மெண்டல் மெடிசின் ஆய்வு மைய பேராசிரியர் கண்டர் கம்ப்ஃப் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வகையான கரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவை பல விஷயங்களில் ஒன்றுபோலக் காணப்படுகின்றன.
இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு என எந்த பிரத்யேக சிகிச்சை முறையும் கண்டறியப்படவில்லை. தற்போதைக்கு இந்த வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதே முக்கியமாகக் கருதப்படுகிறது.
இந்த வைரஸ், கைகள் வழியாகவும், காற்று மற்றும் அடிக்கடி தொடும் பொருட்களில் இருந்தும் பரவக் கூடும் என்று அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...