இஸ்ரேல் மீது காசா ராக்கெட் தாக்குதல்
வாஷிங்டனின் மத்திய கிழக்கு சமாதானத் திட்டம் தொடர்பாக இப்பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் காசா தீவிரவாதிகள் வீசிய ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு இஸ்ரேலைத் தாக்கியது.


வாஷிங்டனின் மத்திய கிழக்கு சமாதானத் திட்டம் தொடர்பாக இப்பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் காசா தீவிரவாதிகள் வீசிய ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு இஸ்ரேலைத் தாக்கியது.
இஸ்ரேலிய ராணுவம் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, "காசாவிலிருந்து இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டது, இது திறந்த வெளியில் விழுந்தது" என்று சின்ஹுவா ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த ராக்கெட் ஸ்டெரோட் நகரத்திலும், முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனிய இடத்தைச் சுற்றியுள்ள பகுதியிலும் அமைந்திருந்த சைரன்களைத் தூண்டியது.
இதுவரை எந்தவொரு சேதமும் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.
இஸ்ரேலிய டாங்கிகள் வடக்கு காசா பகுதியில் இரண்டு இடங்களைக் குறி வைத்து ராக்கெட்டை ஏவியதற்கான அடையாளம் காணப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்த சமாதானத் திட்டம் பாலஸ்தீனியர்களால் நிராகரிக்கப்பட்டது. மேலும் இப்பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்த நிலையில் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...