இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 105 வயது முதியவர் கரேனாவை வென்று, பூரண குணமடைந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
பஸல் ராவூப் என்ற 105 வயது முதியவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியவர். இவர் கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் இவருக்குப் கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கரோனா வார்டில் மாற்றப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தார்.
வியாழக்கிழமை முதியவருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வெளியாகின. இதையடுத்து, பூரண குணமடைந்த நிலையில், அவர் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.
பாகிஸ்தானில் இதுவரை 2,21,896 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்றுக்கு 4,551 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதித்த 1,13,623 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று அந்த நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


