பாகிஸ்தானில் பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்குகிறது! நேற்று மட்டும் 4,960 பேருக்கு தொற்று உறுதி!
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,960 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 98,943 ஆக அதிகரித்துள்ளது.


பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,960 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 98,943 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,960 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 98,943 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 67 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 2,002 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 33,465 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்த பாதிப்பில் பஞ்சாபில் 37,090 , சிந்து - 36,364, கைபர்-பக்துன்க்வா- 13,001, பலுசிஸ்தான்- 6,221, இஸ்லாமாபாத் - 4,979, கில்கித்-பல்திஸ்தான்- 927 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...