47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அனைத்து மக்களுக்கும் குறிப்பிட்ட வசதியான சமூகத்தில் வாழும் உரிமயை வழங்கும் சீனா!

சீனாவின் பல ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றில், போதுமான உணவு மற்றும் ஆடைகள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வது என்பது சீனத் தேச மக்களின்  அடிப்படியான விருப்பமாகும். 

News image
Updated On :26 ஜூன் 2020, 12:00 pm

DIN

சீனாவின் பல ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றில், போதுமான உணவு மற்றும் ஆடைகள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வது என்பது சீனத் தேச மக்களின்  அடிப்படியான விருப்பமாகும். 

சீன தேசத்தில் ஆயிரம் ஆண்டுகளாக நிலவி வந்த வறுமை பிரச்சினை இவ்வாண்டு தீர்க்கப்படும்.  இந்த சாதனை, சீனா மட்டுமல்லாமல் உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2020ஆம் ஆண்டு தற்போதைய வரையறையின்படி, கிராமப்புறங்களில் வறிய மக்கள் அனைவரும் வறிய நிலையில் இருந்து விடுவிக்கப்படுவர் என்ற இலக்கை நனவாக்க வேண்டும் என்று சீனா வாக்குறுதி அளித்துள்ளது.

இந்நிலையில்,  உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள், கட்டாயக் கல்வி, அடிப்படை மருத்துவச் சிகிச்சை, வீட்டு வசதி ஆகிய அடிப்படைக் காப்புறுதி மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இவ்வாண்டு ஷான்சி, சான்சி, நிங்சியா ஆகியற்றில் ஆய்வுப் பணி மேற்கொண்டபோது, உள்ளூரில் வறுமை ஒழிப்புப் பணியில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். இதுவே, சீனா திட்டப்படி இந்த இலக்கை நனவாக்குவதன் நம்பிக்கையையும் மனவுறுதியையும் வெளிக்காட்டுகிறது.

வறுமை ஒழிப்பு மற்றும் வசதியான வாழ்க்கையை உருவாக்குவது, வறிய பிரதேசங்களுக்குச் சொந்த விடயம் மட்டுமல்லாமல், முழு சமூகமும் இதில் ஈடுபடுமாறு ஊக்கமளிக்கப்படுகிறது.

கடந்த ஜுன் 8ஆம் தேதி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், நிங்சியா பிரதேசத்திலுள்ள குடியிருப்பு ஒன்றை ஆய்வு செய்தபோது, பல்வேறு தேசிய இனங்கள், சீனத் தேசக் குடும்பத்தில் ஒன்றாகும். எனவே, வறுமை ஒழிப்பு, குறிப்பிட்ட வசதியான சமூக உருவாக்கம், நவீனமயமாக்கம் ஆகிய முன்னேற்றத்தில் எந்தொரு தேசிய இனமும் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

பல்வேறு தேசிய இனங்கள் அனைத்தும் இணைந்து முன்னேறி, குறிப்பிட்ட வசதியான சமூகத்தில் நுழைவது,  சீனத் தேசத்தின் சிறந்த பாரம்பரியமாகும்.

தகவல்: சீன ஊடக க்குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.