அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கரோனா எதிரொலி: ஆஸ்திரேலியாவில் தற்கொலை விகிதம் 50% உயரும் அபாயம்

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஆஸ்திரேலியாவில் தற்கொலை விகிதம் 50% உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :7 மே 2020, 9:10 am


கான்பெர்ரா: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஆஸ்திரேலியாவில் தற்கொலை விகிதம் 50% உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள், மன ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்துவதன் காரணமாக, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை 50% அதிகரிக்கும் அபாய ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் மனநல மருத்துவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதன் காரணமாக ஆண்டு தோறும் இறப்பு விகிதம் சுமார் 1,500 அளவுக்கு அதிகரிக்கும் என்றும், இது தற்போது ஆண்டுக்கு தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையான 3000ல் 50% ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயரும் தற்கொலை விகிதத்தில் 30 சதவீதம் அளவுக்கு 15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கும் என்றும், ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மேலும் மோசமடைந்தால் இந்த தற்கொலை எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 6,894 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 97 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.