கான்பெர்ரா: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஆஸ்திரேலியாவில் தற்கொலை விகிதம் 50% உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள், மன ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்துவதன் காரணமாக, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை 50% அதிகரிக்கும் அபாய ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் மனநல மருத்துவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதன் காரணமாக ஆண்டு தோறும் இறப்பு விகிதம் சுமார் 1,500 அளவுக்கு அதிகரிக்கும் என்றும், இது தற்போது ஆண்டுக்கு தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையான 3000ல் 50% ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயரும் தற்கொலை விகிதத்தில் 30 சதவீதம் அளவுக்கு 15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கும் என்றும், ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மேலும் மோசமடைந்தால் இந்த தற்கொலை எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 6,894 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 97 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


