ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: காவலர்கள் 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் புதன்கிழமை காலை 6:30 மணியளவில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. கைர் கானா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை வாகனத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் காவலர்கள் இருவர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த 3 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை பொதுமக்கள் 876 பேர் பலியாகி உள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...