சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

புளோரிடாவில் வெள்ளம்: கரோனா பரிசோதனைகள் நிறுத்திவைப்பு

புளோரிடா மாகாணத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரோனா பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

புளோரிடாவில் வெள்ளம்: கரோனா பரிசோதனை நிறுத்திவைப்பு

Updated On :11 நவம்பர் 2020, 10:53 am

புளோரிடா மாகாணத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரோனா பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் ஹார்ட் ராக் திடலில் அதிக அளவிலான மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மேற்கு கியூபாவில் நிலைகொண்டிருந்த இட்டா எனும் வெப்பமண்டலப் புயல் நேற்று புளோரிடா நோக்கி நகர்ந்ததால், புளோரிடா மாகாணத்தில் தொடர் கனமழை பெய்தது. 

இதன் விளைவாக அதிக அளவில் கரோனா பரிசோதனை செய்து வந்த ஹார்ட் ராக் திடல் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனால் கரோனா பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

வளைகுடா நாடுகளின் கடற்கரையை நோக்கி புயல் நகர்வதால், இந்தப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் புளோரிடாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கரோனா பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.