சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

இந்தோனேசியாவில் புதிதாக 5,444 பேருக்கு கரோனா

இந்தோனேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,444 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  மொத்த பாதிப்பு 4,57,735-ஆக அதிகரித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 நவம்பர் 2020, 12:51 pm

இந்தோனேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,444 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  மொத்த பாதிப்பு 4,57,735-ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் இந்தோனேசியாவிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,444 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,57,735-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிற்கு புதிதாக 104 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 15,037-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,010 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,85,094-ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் 34 மாகாணங்களிலும் கரோனா தொற்று பரவியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மத்திய ஜாவாவில் 1,362 பேரும், ஜகர்தாவில் 1,033 பேரும், கிழக்கு ஜாவாவில் 801 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.