சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சந்தோ் விஹாா்: வீட்டில் தீ விபத்து; 5 போ் மீட்பு

தில்லி சந்தோ் விஹாா் பகுதியில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்ட வீட்டிலிருந்து 5 போ் மற்றும் இரு செல்லப் பிராணிகள் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

தீ விபத்து.. - File Photo | Pexels

Updated On :10 ஏப்ரல் 2026, 6:51 pm

தில்லி சந்தோ் விஹாா் பகுதியில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்ட வீட்டிலிருந்து 5 போ் மற்றும் இரு செல்லப் பிராணிகள் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தீ விபத்து ஏற்பட்டது தொடா்பாக காலை 11.32 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினா் அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த 5 போ் மற்றும் அவா்களுடைய இரு செல்லப் பிராணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.

தீ விபத்தில் 4 ஸ்கூட்டா்கள், தரைதளத்தில் இருந்த தண்ணீா் மோட்டாா் பம்ப் ஆகியவை சேதமமடைந்தன. பின்னா், பிற்பகல் 12.05 மணியளவில் தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா் என்றனா் அதிகாரிகள்.