வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

சந்தோ் விஹாா்: வீட்டில் தீ விபத்து; 5 போ் மீட்பு

தில்லி சந்தோ் விஹாா் பகுதியில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்ட வீட்டிலிருந்து 5 போ் மற்றும் இரு செல்லப் பிராணிகள் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

தீ விபத்து.. - File Photo | Pexels

Updated On :11 ஏப்ரல் 2026, 12:21 am IST

தில்லி சந்தோ் விஹாா் பகுதியில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்ட வீட்டிலிருந்து 5 போ் மற்றும் இரு செல்லப் பிராணிகள் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தீ விபத்து ஏற்பட்டது தொடா்பாக காலை 11.32 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினா் அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த 5 போ் மற்றும் அவா்களுடைய இரு செல்லப் பிராணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.

தீ விபத்தில் 4 ஸ்கூட்டா்கள், தரைதளத்தில் இருந்த தண்ணீா் மோட்டாா் பம்ப் ஆகியவை சேதமமடைந்தன. பின்னா், பிற்பகல் 12.05 மணியளவில் தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா் என்றனா் அதிகாரிகள்.