சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ரஷியாவில் புதிய உச்சம்: ஒரேநாளில் 22,778 பேருக்கு கரோனா

ரஷியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 22,778 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :16 நவம்பர் 2020, 12:55 pm


ரஷியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 22,778 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 22,572 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய (திங்கள்கிழமை) பாதிப்பு எண்ணிக்கை கூடியுள்ளது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை 22,702 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதே ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையின் உச்சமாக இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 22,778 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,48,603 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,640 பேருக்கு (24.8 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.

நேற்று 352 பேர் நோய்த் தொற்றால் பலியான நிலையில், இன்று 303 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 33,489 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 13,864 பேர் நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். நேற்றைய தினத்தைக் காட்டிலும் (14,456) இது குறைவான எண்ணிக்கை. இதுவரை மொத்தம் 14,53,849 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.