தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தென்னாப்ரிக்காவில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்  கரோனாவுக்கு பலி

தென்னாப்ரிக்காவில் வசித்து வந்த மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் சதீஷ் துபேலியா கரோனாவுக்கு பலியானார். 

News image

தென்னாப்ரிக்காவில் மகாத்மா காந்தியின் பேரன்  கரோனாவுக்கு பலி

Updated On :23 நவம்பர் 2020, 9:18 am

PTI


தென்னாப்ரிக்காவில் வசித்து வந்த மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் சதீஷ் துபேலியா கரோனாவுக்கு பலியானார். 

தனது 66-வது பிறந்த நாளை மூன்று நாள்களுக்கு முன்பு கொண்டாடிய சதீஷ் துபேலியா கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பலியானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

துபேலியாவின் சகோதரி உமா துபேலியா இது பற்றி கூறுகையில், நிமோனியா காய்ச்சல் பாதித்து ஒரு மாத காலத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

சதீஷ் துபேலியா பெரும்பாலான தனது வாழ்நாளை ஊடகங்களுக்காகவே செலவிட்டுள்ளார். புகைப்படக் கலைஞர், விடியோ பதிவாளர் என தனது பணியை மேற்கொண்ட சதீஷ், காந்தி மேம்பாட்டு அறக்கட்டளையில் அங்கம் வகித்தவர்.

தொடர் சிகிச்சையில் இருந்து வந்த சதீஷுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு பலியானார் என்று தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் இளைய மகன் மணிலால் காந்திக்கு மூன்று பேரப்பிள்ளைகள், உமா துபேலியா, சதீஷ் துபேலியா மற்றும் கீர்த்தி மேனன். 

மகாத்மா காந்தி தென்னாப்ரிக்காவில் விட்டுவந்த பணிகளை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மணிலால் காந்தி கவனித்து வந்தார். தற்போது மகாத்மா காந்தியின் பெயரில் ஜோஹன்னஸ்பெர்க்கில் நடைபெற்ற வரும் பல்வேறு பணிகளை மணிலால் பேத்தி கீர்த்தி மேனன் கவனித்துக் கொள்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.